நந்திவரத்தில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய எம்எல்ஏ

நந்திவரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்களை எம்எல்ஏ வழங்கினார்.

Update: 2024-06-11 10:34 GMT

புத்தகங்கள் வழங்கிய எம்எல்ஏ

செங்கல்பட்டு மாவட்டம்,நந்திவரம் -கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 -ஆம் வகுப்பு, 11 -ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்சியில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற துணை தலைவர் லோகநாதன்,பள்ளிதலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் ,வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் ,பெற்றோர்கள்,கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News