பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ பரிசு

பெரம்பலூரில் தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

Update: 2024-01-08 04:05 GMT
 தந்தை பெரியாரின் 50வது நினைவு நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் பேச்சு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ரோவர் கல்விகுழுமங்களின் தலைவர் வரதராஜன் மற்றும் முகுந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு, மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News