கணவர் உடல் புதைக்கப்பட்டதில் மர்மம் - மனைவி புகார்

மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரியில் கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-17 03:56 GMT

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி நடு தெருவில் சேர்ந்தவர் லட்சுமணன் (40) இவரது மனைவி சுபஸ்ரீ (35) இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் ஊரான வழுவூரில் சென்று தங்கி விட்டார். இதற்கிடையில் சம்பவ தினத்தன்று லட்சுமணன் இறந்து விட்டதாக கிடைத்த தகவலின் பேரில் சுபஸ்ரீ சென்று கணவன் உடலைப் பார்த்த போது காயங்கள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து லட்சுமணன் சகோதரர்களிடம் கேட்டதற்கு யாரும் எந்த பதிலும் கூறாமல் உடனடியாக லட்சுமணன் உடலை கொண்டு போய் புதைத்து விட்டனர். சந்தேகம் அடைந்த சுபஸ்ரீ இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து லட்சுமணன் உடலை தோண்டி உடல்கூறு ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News