கருங்காலிமேட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு

தர்மபுரி மாவட்டம், கருங்காலிமேட்டில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய நியாயவிலைக்கடையை சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி திறந்து வைத்தார்.

Update: 2024-02-19 02:51 GMT

நியாயவிலைக்கடை திறப்பு

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி கருங்காலிமேட்டில் புதியதாக நியாய விலை கடை வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தியதின் பேரில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலை கடையை பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவருமான ஜி.கே மணி அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நியாய விலைக் கடை பொருட்களை வழங்கினார்.

மேலும் பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் ஏதேனும் இருப்பின் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் நியாய விலை கடை ஊழியர்கள் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News