ரயிலிலிருந்து தவறி விழுந்து வட மாநில இளைஞர் பலி

ஆம்பூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து ஜார்கண்ட் மாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-05-20 08:09 GMT

இளைஞரின் சடலம் மீட்பு 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற விரைவு ரயிலில் பயணம் செய்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது சடலத்தை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News