குடியாத்தம்: மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது!
டூவீலரில் மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-28 16:24 GMT
கோப்பு படம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சேங்குன்றம் பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகளை கடத்தி வந்த நபரை தடுத்து நிறுத்தினர். அந்த நபரிடம் விசாரணை செய்ததில் சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ரகு (வயது 26) என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுவை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.