புளியங்குடி அருகே கோயில் நிலம் மீட்பு

தென்காசி மாவட்டம் , சேர்ந்தமரம் திருமூல விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டு முள்வேலி அமைக்கப்பட்டது.

Update: 2024-01-21 08:20 GMT
புளியங்குடி அருகே கோயில் நிலம் மீட்பு
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சேர்ந்தமரம் திருமூல விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.11 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 76 சென்ட் நிலம் நீண்ட காலமாக தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதில் தூத்துக்குடி மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின் படி, உதவி ஆணையர் மண்டல துணை தாசில்தார் மற்றும் அறநிலையத்துறையினர் வருவாய்த்துறையினர் இணைந்து இந்த ஆக்கிரமிப்பை மீட்டு கல் நட்டு முள்வேலி அமைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News