எதிர்ப்பைக் காட்டினால் தான் ஆட்சிகளும், காட்சிகளும் மாறும் - சரத்குமார்

தேர்தலின் போது எதிர்ப்பைக் காட்டினால் தான் ஆட்சிகளும், காட்சிகளும் மாறும் என, ச.ம.க., தலைவர் சரத்குமார் கூறினார்.

Update: 2023-12-09 10:11 GMT

தேர்தலின் போது எதிர்ப்பைக் காட்டினால் தான் ஆட்சிகளும், காட்சிகளும் மாறும் என, ச.ம.க., தலைவர் சரத்குமார் கூறினார். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நெல்லையில் நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,   சென்னையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பால் சென்னை மக்கள் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் தமிழக அரசின் நடவடிக்கை நிறைவாக இல்லை பொதுமக்கள் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் இத்தகைய பேரிடர் காலங்களில் பேரிடரில் இருந்து பொதுமக்களை மீட்க சிறப்பு படை அமைக்க வேண்டும் தற்போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள் ஆனால் தேர்தல் காலங்களில் இதை மறந்து விடுகிறார்கள் தேர்தல் காலங்களில் இப்போது தெரிவிக்கும் எதிர்ப்பை காட்டினால் தான் ஆட்சிகள் மாறும் காட்சிகள் மாறும் என அவர் கூறினார்.

  மேலும் அவர் கூறுகையில் தென் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி இல்லாததால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  2024 பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனியாக சந்திக்கும் என அவர் தெரிவித்தார்

Tags:    

Similar News