சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
சங்ககிரி அருகே அரசிராமணி சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.;
Update: 2024-02-21 16:00 GMT
சங்ககிரி அருகே அரசிராமணி சோழீஸ்வரர் கோவிலில் பிரதேச சிறப்பு பூஜை நடந்தது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி உடனமர் அருள்மிகு சோழீஸ்வரர், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பால்,தயிர்,சந்தனம், திருமஞ்சனம், பன்னீர்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிபாடு செய்தனர்.