மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-11 07:02 GMT

அணை நீர் திறப்பு 

திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களின் பிசான பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.மணிமுத்தாறு அணை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலையில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தாமிரபரணி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், வடிநிலக் கோட்டசெயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் ஆவடி நாயகம், முருகன், உதவிப் பொறியாளர்கள் மாரியப்பன், தினேஷ் அம்பாசமுத்திரம் நகர்மன்றத் தலைவர் கே.கே.சி.பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News