தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

எல்.எண்டத்தூர் கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்களின் 2 வீடுகள் தீ விபத்தில் சிக்கியதால் சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழகினார்.

Update: 2024-02-07 06:28 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள எல்.எண்டத்தூர் கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்களின் 2 வீடுகள் தீ விபத்தில் சிக்கியதை அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார், பின்பு நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்வின் போது,ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News