சாலை ஆக்கிரமிப்புகள் - அதிரடி காட்டிய அதிகாரிகள்

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடைகளை அகற்றிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2024-01-04 09:49 GMT

சங்கராபுரத்தில் போக்குவரத்திற்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

சங்கராபுரத்தில் போக்குவரத்திற்கு இடையூராக கடைகள் முன் பகுதியை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்திருந்தனர். இதனால் சாலை குறுகி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசார் கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு பேனர்,காய்கறி வாகனங்கள் ஆகியவற்றை அதிரடியாக அகற்றினர்.

சங்கராபுரம் பூட்டை ரோடு, திருக்கோவிலுார் சாலை,கடை வீதி, கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அகற்றும் பணி நடந்தது. சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

Similar News