குடியரசு தின விழா- தேசியக் கொடி ஏற்றி வைத்த எம்எல்ஏ சிவகாமசுந்தரி

மணவாடி ஊராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

Update: 2024-01-26 04:11 GMT
குடியரசு தின விழா- மணவாடி ஊராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்த எம்எல்ஏ சிவகாமசுந்தரி. நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மணவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நிறுவப்பட்டுள்ள கொடி கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினர் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் மணவாடி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வசந்தி சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவினர் என ஏராளமான கலந்து கொண்டு கொடியேற்ற நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News