சாரணார்பட்டியில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைக்க கோரிக்கை

சாரணார்பட்டியில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-01-08 12:04 GMT

கோப்பு படம் 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் கன்னியாபுரம், கொசவபட்டி ஆகிய பகுதிகளில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைந்துள்ளது.

இங்கு ஒரு குடம் ரூ 2 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இந்த நிலையில் சாணார்பட்டியில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் இல்லாததால் குடிநீருக்காக சுமார் 3 கிலோ மீட்டர் கடந்து கன்னியாபுரம் செல்லும் சூழ்நிலை உள்ளது.

இதனால் குடிநீர் கேன் ரூ 30 க்கு வாங்கி பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News