கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்கப்பட்டது.

Update: 2024-06-05 02:41 GMT

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு  

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியை அடுத்த மொட்டையனூா் கிராமத்தைச் சோ்ந்த செல்லத்துரை என்பவரது பசு மாடு பாலையா என்பரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மற்றொரு மாடு முட்டி தள்ளியதில் அருகில் உள்ள கிணற்றுக்குள் பசு மாடு விழுந்தது. தகவல் அறிந்த ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான வீரா்கள் சென்று அந்த மாட்டை பத்திரமாக மீட்டனா். மீட்கப்பட்ட மாட்டின் மதிப்பு ரூ. 60 ஆயிரம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News