நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் !

மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-04 12:16 GMT

ஆய்வு கூட்டம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா அவர்கள் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது இதில் பள்ளிபாளையத்தில் பாலம் வேலை நடைபெறுவதை ஒட்டி பாலம் வேலை குறித்து,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா ஆலோசனை மேற்கொண்டார். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவலர்களை பணியில் அமர்த்துவது.

மேலும் பேருந்து நிறுத்தம் அருகில் புதிய பாலத்தின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை கட்டுவதற்கும் அதை பராமரிப்பதற்கும் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ் அனுமதி கேட்ட நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கழிப்பறை கட்டுவதற்கு உடனடியாக அனுமதி வழங்கினார். இந்த கூட்டத்தில் கோட்டாட்சியர், ஆணையாளர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், காவல் ஆய்வாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News