கலவரம் தான் பாஜவினரின் இலக்கு -சீமான்

கலவரம் தான் பாஜவினரின் இலக்கு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

Update: 2024-04-10 11:52 GMT

   கலவரம் தான் பாஜவினரின் இலக்கு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். 

 கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி ஜெகநாதனை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்ட மேடையில் பேசிய சீமான் கலவரத்தில் பிறந்தவர்கள் தான் பாஜகவினர். கலவரம் தான் அவர்களின் இலக்கு எனவும் யானைக்கும் மனிதனுக்கு மதம் பிடித்தால் அழிவு தான். பிறப்பில் உயர்வு தாழ்வு பாகுபாடு பார்க்கும் இவர்களில் இருந்து விடுதலை வேண்டும் என்பதே கோட்பாடு என்றார்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது தான் நிஜம். சாதி மதம் உணர்வு ஒழிந்த பிறகு தான் தமிழன் என்ற உணர்வு மேல் ஒங்கும் என்றார். சிவன் முருகன் வழிபடும் செய்யும் வீர கூட்டம் தான் நாம் எனவும் யார் இங்கு சிறுபான்மை?? அவனுக்கும் ஜி.எஸ்.டி 18% தான்,உனக்கும் ஜி. எஸ். டி 18% தான்.

(பாஜகவிற்கு) இவங்களுக்கு ஒட்டு போட்டு என்ன பண்ணிட்டு இருக்காங்க? ரோட் ஷோ என்ற பெயரில் கரகாட்டம் ஆடிட்டு இருக்கிறார். ராமர் வேசம் போட்டு தினமும் ரோட்டில் பிட்சை எடுத்து வருகிறார்கள். யாராவது ராவணன் வேடம் போட்டு பிச்சை எடுக்கிறார்களா? மேலும் 500 கொடுத்து 500 கோடி கொள்ளை அடிப்பான் எனவும் ஆக்குக்கு பணம் கொடுக்க வந்தால் அவர்களை விரட்டி அடிக்க வேண்டும்.

நேர்மையான அதிகாரி, ஐ.பி.எஸ் அதிகாரி ஒற்றை ஆளாக சுதந்திரம் வாங்கி கொடுத்த மாதிரி பேசுகிறார் தம்பி அண்ணாமலை. திமுக எதிர்கட்சியாக இருந்தால் go back Modi, ஆட்சிக்கு வந்தவுடன் welcom Modi என்று சொல்லும் திமுகவை நம்பி மீண்டும் வாக்கு செலுத்த போகிரமா? என்று கேள்வி எழுப்பினார்.

திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது. அருணாசலம் பிரதேசம் போயி சீனாவுக்கு போயிருவன். இந்திகாரன் பையன் மூலம் தான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். காலையில் புரோட்டா!! நைட் கஞ்சா விற்பான் இந்திக்காரன் எனவும் பாஜகவிற்கு ஏன் தமிழ்நாடு மக்களின் வாக்குகள் வேண்டும். 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டிற்கு என்ன செய்தார்கள் ஒன்றும் அவர்கள் செய்யவில்லை.

காவேரி தண்ணீர் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? காங்கிரசின் நிலைப்பாடு என்ன? மேகதாது அணை கட்டுவது குறித்து அண்ணாமலையின் நிலைப்பாடு ? என்ன..? வரிசையாக கேள்விகள் எழுப்பினார். பின்னர் ட்ரெயின்யில் பிடித்த 4 கோடி கருப்பு பணம் எங்கு இருந்து வந்துள்ளது. பாஜகவும் காங்கிரசும் ஆட்சி செய்து எங்களை என்ன நிலைமையில் வைத்து உள்ளீர்கள். திமுக இன்னும் ஏன் டாஸ்மாக் மூடவில்லை. 10 ஆண்டுகளில் பிரதமர் ஒருமுறையாவது பத்திரிக்கையாளர்களை சந்தித்து உள்ளாரா?

ஜி.எஸ்.டி வருவாய் பெருக்கம் எவ்வளவு? அதை மீண்டும் மக்களுக்கு எப்படி திட்டங்கள் வகுக்கப்பட்டது. உலகத்தின் குப்பை மேடாக மாறியது தான், கிளின் இந்தியாவின் சாதனை. மேலும் புவி வெப்பம் ஆகுவதை ஏன் இன்னும் தடுக்கவில்லை. விண்ணுக்கு சந்திராயன், கழிவை மனிதன் பக்கெட்டில் அள்ளுவது தான் வளர்ச்சி என்கின்றார். வாக்கு பெட்டியில் ஒன்னும் செய்ய முடியாது! தேர்வு எழுத போகும் மாணவிகள் மூக்குத்தியில் பிட் கொண்டு போகிறாள் என்பதை எப்படி நம்புகிறாய் எனவும் கேள்வி எழுப்பினர்.

தேசிய மலர் தாமரை சின்னத்தை எடு? இல்லை என்றால் புலி சின்னமாக எனக்கு கொடு.. இல்லை காலிஃப்ளவரை தேசிய மலராக அறிவிப்பு செய். ரூபாய் தாள்களில் காந்தி படத்தை எடு. அதற்கு பிரதமர் மோடி படத்தை போடு.

தம்பி அண்ணாமலையை கர்நாடகவில் நின்னு எம்பியாக சொல்லு.. மதத்துக்கு ஒட்டு போடுவியா? சாதிக்கு ஒட்டு போ? நீயே முடிவு செய்து கொள். உன் இடத்தை தக்க வைத்துக்கொள். மக்களுக்கு நல்லதே நடக்க கூடாது என்பது தான் திராவிட சக்திகள். மருத்துவருக்கு இடம் கொடுத்தது நோயாளி இல்லாத சமூகம் உருவாக்க தான். பின்னர் வருடம் 4 தேர்தல் நடக்குது என்ற பாடல் பாடியும் , உன்னால் முடியும் பாடல் பாடியும், ஏற்றோம் வரணும் பாரு என்ற பாடல் பாடியும், ஒட்டு போட போற பொண்ணு பாடல் பாடியும் வாக்குகளை கேட்டார்.

Tags:    

Similar News