கொள்ளையன் கைது - தம்மம்பட்டியில் 50 பவுன் நகைகள் மீட்பு !!
விட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த நபர் கைது - மேலும் அவரிடம் இருந்து 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-28 11:38 GMT
வழக்குப்பதிவு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செங்காட்டை சேர்ந்த பழனிமுத்து (வயது 65). வீட்டு தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 19-ந் தேதி இவரது வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை போனது. இதுதொடர்பான புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே தம்மம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், அவர் ஆத்தூர் அருகே விநாயகபுரம் எம். ஜி. ஆர். நகரை சேர்ந்த பெருமாள் மகன் குஞ்சாய் என்ற தேவா (30) என்பதும், அவர் பழனிமுத்து வீட்டில் பூட்டை உடைத்து திருடியுள்ளது தெரிய வந்தது. மேலும் வாழப்பாடி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆட்கள் இல்லாதவீடுகளை நோட்டமிட்டு திருடும் பாணியை தேவா கையாண்டு வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. தேவா ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.