மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு பகுதியில் மூதாட்டியிடம் பேசுவது போல் நடித்து ஒரு பவுன் தங்க செயினை களவாடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-04-19 08:27 GMT

மூதாட்டியிடம் நகை கொள்ளை 

கரூர் மாவட்டம், மணவாடி, பால்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுசாமி மனைவி கஸ்தூரி வயது 65. இவர் ஏப்ரல் 13ஆம் தேதி காலை 9.30 மணி அளவில், ஆட்டையாம்பரப்பு பஸ் ஸ்டாப் அருகே தன்னுடன் பணி செய்யும் தொழிலாளர்களுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த, கரூர், ஆண்டங்கோவில் கிழக்கு, செட்டிபாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் மகன் முத்துக்குமார் வயது 26 என்பவர் மூதாட்டி கஸ்தூரி இடம் பேச்சு கொடுத்துள்ளார்.

பேசிக் கொண்டிருக்கும்போதே, கஸ்தூரி வைத்திருந்த ஒரு பவுன் தங்கச் செயினை களவாடி சென்றுள்ளார். முத்துக்குமார் அந்த இடத்திலிருந்து சென்ற பிறகு கவனித்துள்ளார் கஸ்தூரி. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து இருந்த காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, முத்துக்குமார் மூதாட்டி கஸ்தூரி இடம் இருந்து ஒரு பவுன் தங்க செயினை களவாடிச் சென்றது தெரியவந்தது. எனவே, முத்துக்குமாரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Tags:    

Similar News