ரூ. 3 கோடியில் திட்டப் பணிகள்: கீழப்பாவூா் பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு

ரூ. 3 கோடியில் திட்டப் பணிகள் தொடங்க கீழப்பாவூா் பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-18 10:51 GMT
ரூ. 3 கோடியில் திட்டப் பணிகள்: கீழப்பாவூா் பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் பேரூராட்சியில் நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தில், ரூ. 3 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ள முடிவு மேற்கொள்ளப்பட்டது. தலைவா் பி.எம்.எஸ். ராஜன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் மாணிக்கராஜ், துணைத் தலைவா் ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழப்பாவூா் பேரூராட்சியில் ரூ. 3 கோடியில் குடிநீா்த் திட்டம், பொதுசுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி மேற்கொள்ள தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினா்கள் ராதா விநாயகப்பெருமாள், கோடிஸ்வரன், மாலதி முருகேசன், ஜெயசித்ரா குத்தாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News