கள்ளச்சாராய விற்பனை: 4பேர் குண்டாசில் கைது

Update: 2023-10-30 12:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் & வட்டம், சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மானந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (45), ஆகிய இருவரும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர்.ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விஜி என்ற விஜயகுமார்  மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், களம்பூர் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் (45)  ஆகிய இருவரும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

அவர்கள் மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மேற்கண்ட 4 நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News