குட்கா விற்பனை: கடைகளுக்கு அதிகாரிகள் சீல்

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த நல்லாம்பாளையம் மளிகை கடைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு சீல் வைத்தனர்.

Update: 2023-12-16 14:52 GMT

சீல் வைக்கும் அதிகாரிகள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நல்லாம்பாளையம், வையப்பமலை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த இருகடைகளுக்கு அதிகாரிகள் பூட்டுபோட்டு சீல்வைத்தனர். எலச்சிபாளையம் அருகில் நல்லாம்பாளையம் பகுதியில் சங்கீதா மளிகைகடை என்ற பெயரில் கடை நடத்திவந்த சங்கீதா என்பவர், அரசால் தடை விதிக்கப்பட்ட குட்கா, கான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்துவந்துள்ளார்.

இதுசம்மந்தமாக அவர்மீது, கடந்த நவ.30ல் எலச்சிபாளையம் போலீஸ்ஸ்டேசனில் வழக்குபதிவுசெய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதையொட்டி நேற்று, உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கார்த்திகேயன் தலைமையில், எலச்சிபாளையம் எஸ்.ஐ., ராமச்சந்திரன் முன்னிலையில், கடைக்கு பூட்டுபோட்டு சீல்வைக்கப்பட்டது.

அதேபோல், வையப்பமலையில் சாந்தி பெட்டிகடை என்ற பெயரில் பெட்டிகடை நடத்திவரும் சாந்தி என்பவரது கடைக்கும் அதிகாரிகள் பூட்டுபோட்டு சீல்வைத்தனர்.

Tags:    

Similar News