36 மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 36 மாணவ- மாணவிகளுக்கு ரூ.50 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

Update: 2024-05-24 13:02 GMT

சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 36 மாணவ- மாணவிகளுக்கு ரூ.50 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.


சாகர் இன்டர்நேசனல் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு சி.பி. எஸ்.இ. பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண்கள் எடுத்து மாணவ- மாணவிகள் சாதனை படைத்தனர். 12-ம் வகுப்பில் எஸ்.தக்ஷிதா 500- க்கு 486 மதிப்பெண்களும், எஸ்.ரித்திக்பிரணவ் 485 மதிப் பெண்களும், டி.ஜஸ்வந்த் 484 மதிப்பெண்களும் பெற்றனர். 10-ம் வகுப்பில் டி.ஸ்ரீஹரி 500- |க்கு 481 மதிப்பெண்களும், / வி.ஆதித்யவர்ஷன் 479 மதிப் பெண்களும், டி.எஸ்.முகந் தியா ஸ்ரீ 478 மதிப்பெண்களு டம் எடுத்து வெற்றி பெற்ற னர்.

இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மதிப்பெண் கள் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாபள்ளிக்கூடத்தில் நடை பெற்றது. விழாவுக்கு பள்ளிக்கூடத் தின் தலைவர் எஸ்.ஆறுமுகம் | தலைமை தாங்கினார். தாளா ளர் மற்றும் செயலாளருமான சவுந்திரராசன் கலந்து கொண்டு மாணவ- மாண விகளுக்கு கல்வி உதவித்தொ கையை வழங்கி வாழ்த்தி பேசினார். இதையொட்டி 36 மாணவ-மாணவிகளுக்கு ரூ.50 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இதில் முதல்வர் பி.ஆர். ஷீஜா கல்வி இயக்குனர் சுரெந்திரா ரெட்டி, பொரு ளாளர் எஸ்.கே.பழனிச்சாமி, உதவி தலைவர் கே.கிருஷ் ணன், உதவிச்செயலாளர் கே.சாமிநாதன், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News