கல்வி உதவித்தொகை தேர்வு

நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், கல்வி உதவித்தொகை தேர்வு மற்றும் வழிகாட்டி முகாம் நடந்தது.

Update: 2024-07-02 01:12 GMT

நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், கல்வி உதவித்தொகை தேர்வு மற்றும் வழிகாட்டி முகாம் நடந்தது. 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சென்னை முஹம்மது சதக் கல்வி அறக்கட்டளையும் நத்தம் இக்ரஹ் கல்வி சென்டர் இணைந்து நடத்திய கல்வி உதவித் தொகை தேர்வு & கல்வி வழிகாட்டி முகாம் நத்தம் இக்ரஹ் கல்வி சென்டர் நிர்வாகியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நத்தம் தொகுதி செயலாளர் மெளலவி பதுருதீன் ஹஜ்ரத் தலைமைமையில் நடைபெற்றது.

இக்ரஹ் கல்வி சென்டர் நிர்வாகிகள் டாக்டர் முஹம்மது மீரான், அப்துல் பாசித் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சென்னை முஹம்மது சதக் கல்வி குழும பேராசிரியர் முனைவர் அபூதாஹிர் கல்வி வழிகாட்டல் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இக்ரஹ் கல்வி சென்டரின் கல்வி அலுவலர் நெல்சன் மற்றும் மாணவ,மாணவியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News