இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த கஞ்சா கைப்பற்றல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இரால் பண்ணையில் வைத்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த சுமார் ஒரு கோடியே ஐந்து லட்சம் மதிப்புடைய 874 கிலோ கஞ்சாவை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கதுறை துறையினர் பறிமுதல் செய்தால் பரபரப்பு.

Update: 2024-03-11 06:50 GMT

கஞ்சா பறிமுதல் 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீமிசல் அடுத்த அரசங்கரை கடற்கரை பகுதியில் உள்ள இரால் பண்ணை ஒன்றில் கிலோ கணக்கில் கஞ்சா இருப்பதாகவும், அதனை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த தயாராக சிலர் உள்ளதாக திருச்சியில் உள்ள நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தலைவர்கள் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அரசங்கரை பகுதியில் உள்ள இரால் பண்ணைகளில் மீமிசல் காவல் துறையினர் உதவியோடு சேர்ந்து தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கே இருந்த இறால் பண்ணை ஒன்றில் படகுகள் மூலமாக இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த சுமார் 1.05இலட்சம் மதிப்புடைய 874 கிலோ கஞ்சாவை கண்டறிந்தனர். கண்டறியப்பட்ட கஞ்சாவை கைப்பற்றி பறிமுதல் செய்த மத்திய சுங்கத்துறை நுன்னறிவு பிரிவினர் அவற்றை ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த கஞ்சா கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுல்தான் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News