சிக்கல் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

சிக்கல் சிங்காரவேலவன் (முருகன்) கோயிலில் பங்குனி மாத கார்த்திகை வழிபாடு ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-15 12:53 GMT

சிக்கல் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

நாகை மாவட்டம், சிக்கல் நவனீதிஸ்வரர் கோயிலில் சிங்காரவேலவருக்கு (முருகன்) நேற்று பங்குனி மாத கார்த்திகை வழிபாடு நடைபெற்றது முருகன் சூரனை வதம் செய்ய தனது தாயாரான சிக்கல் வேல் நெடுங்கண்ணி (பார்வதியிடம்)வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததாகவும் வேல் நெடுங்கண்ணிடம் முருகன் வாங்கும் போது முருகனின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை அற்புதக் காட்சி ஆண்டு தோறும் சூரசம்கார விழாவின்போது .நடைபெறும்.

நேற்று பங்குனி மாத கார்த்திகையை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு, (முருகன்) 200 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் , உள்ளிட்ட திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று. அதை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாசி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், சிவாச்சாரியார்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News