சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

புத்தளி கிராமத்தில்,சீனிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-07-04 14:30 GMT

கும்பாபிஷேகம் 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், புத்தளி கிராமத்தில்,சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. சிறிய அளவில் இருந்த இக்கோவிலை சற்று பெரிய அளவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர், திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, வேறோரு இடத்தில் புதியதாக கோவில் கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைதுவங்கியது.

நேற்று, காலை 9:00 மணிக்கு கலசம் புறப்பாடும், காலை 10:00 மணிக்கு கோவில் கோபுரத்திற்கும், தொடர்ந்து மூலவருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது. விழாவில், புத்தளி, காவாம்பயிர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள்பங்கேற்றனர்.

Tags:    

Similar News