காஞ்சியில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உலா வரும் மாடுகள்

காஞ்சியில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உலா வரும் மாடுகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2024-01-08 15:45 GMT

சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் 

காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், ஒலிமுகமதுபேட்டை பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தின் வழியாக, வேலுார், திருப்பதி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் செல்கின்றன.

காஞ்சிபுரம் நகரில், தான்தோன்றி தனமாக சுற்றித்திரியும் மாடுகள், ஒலிமுகமதுபேட்டை பேருந்து நிறுத்தத்தின் வழியாக செல்லும் வாகனங்களை வழி மறித்து நிற்கின்றன.

குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து, வேலுார் மார்க்கம்; வேலுாரில் இருந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் மார்க்கம்; காஞ்சிபுரத்தில் இருந்து, அரக்கோணம் வழியாக, திருத்தணி, திருப்பதி மார்க்கம்; திருப்பதி, திருத்தணி மார்க்கத்தில் இருந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு மார்க்கமாக செல்லும் வாகனங்களை வழி மறித்து நிற்பதால், வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால், பிரதான சாலை வளைவில் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி சாலை ஓரம் நிற்கும் வாகன ஓட்டிகள் மீது மோதுவதை போல செல்ல வேண்டி உள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது."

Tags:    

Similar News