விடுமுறை அளிக்காததால் மாணவ மாணவிகள் பாதிப்பு

திண்டுக்கல்லில் பலத்த மழையால் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

Update: 2024-01-09 06:16 GMT
திண்டுக்கல்லில் பலத்த மழை 3 மணி நேரமாக கொட்டி தீர்த்த மழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் கழிவு நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர். நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் 3 மணி நேரமாக கனத்த மழை பெய்தது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள் பலர் பள்ளி கல்லூரிகளுக்கு பாதி பேர் வீடுகளிலும் பேருந்து நிலையங்களிலும் மாட்டிக் கொண்டு பள்ளி கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்ல முடியாமல் அவதியுற்றுள்ளனர்.
Tags:    

Similar News