மயிலாடுதுறை அருகே கணவன் சாவில் சந்தேகம்: மனைவி அளித்த புகாரில் இருவர் கைது

மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரியில் கணவன் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் கணவனது சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2024-06-17 16:20 GMT

காவல் நிலையம்

மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி நடு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (40) இவரது மனைவி சுபஸ்ரீ (35) இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக சுபஸ்ரீ தாயார் ஊரான வழுவூரில் வசித்து வருகிறார். 

  இதற்கிடையில் சம்பவதினத்தன்று லட்சுமணன்இறந்து விட்டதாக கிடைத்ததகவலின் பேரில் சுபஸ்ரீசென்று கணவன் உடலைப்பார்த்த போது காயங்கள்இருந்தது தெரியவந்தது. இது குறித்து லட்சுமணன்சகோதரர்களிடம் கேட்டதற்குயாரும் எந்த பதிலும் கூறாமல் சுபசியை திட்டி உள்ளனர். அதன் பிறகு அனைவரும் சேர்ந்து லட்சுமி உடலை புதைத்து விட்டனர்.

சந்தேகம் அடைந்த சுபஸ்ரீ இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில் வழுக்குப் பதிவு செய்யப்பட்டு 16-6-24 அன்று லட்சுமணன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடல் கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே பெரம்பூர் போலீசார், இறந்து போன லட்சுமணனின் சகோதரர்கள் குமார் மற்றும் விக்னேஷை ஆகியோரை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் செய்தி வெளியானது. லட்சுமணன் கடந்த மூன்று ஆண்டுகளாக தினசரி குடித்து விட்டு வந்து வீட்டில் வம்பு வளர்ப்பது வாடிக்கை அவர் மனைவியும் கூட்டி வரவில்லை. அவர் தாயாரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று லட்சுமணன் குடித்துவிட்டு வந்து தாயிடம் உணவு கேட்ட பொழுது வாக்குவாதம் ஏற்பட்டதில் தாயை லட்சுமணன் அடித்துள்ளார். இதைக்கண்ட குமாரும் விக்னேஷும் அம்மாவை அடிக்கிறாய் என்று கேட்டு லட்சுமணனை அடித்தனர் இதனால் லட்சுமணன் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். படுகாயம் அடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் .

இதை மறைத்து லட்சுமணன் உடலை புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் இருவரையும் பெரம்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News