நாளை வேளச்சேரியில் ஆளுநர், அவரது மனைவி வாக்களிக்க உள்ளனர்

தமிழக ஆளுநர் ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் நாளை வாக்களிக்கின்றனர்.

Update: 2024-04-18 10:16 GMT

ஆளுநர் மற்றும் அவரது மனைவி

நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது. நாளை வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளுநரின் துணைவியார் லட்சுமி ரவி, ஆகியோர் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு சென்னை,

வேளச்சேரி சாலையில் உள்ள அட்வண்ட் கிறிஸ்துவ நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க உள்ளனர்.

Tags:    

Similar News