படியூரில் பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்

படியூரில் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு படியூர் தலைவரின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்ட பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2024-07-04 14:33 GMT

பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் இன்று திருப்பூர் மாவட்டம், படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களை அழைத்து செல்ல படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதாசண்முகசுந்தரத்தின் சொந்த நிதியிலிருந்து ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் நன்கொடையாக வழங்கப்பட்ட பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்து பயணம் செய்தார்கள்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர்விழி, படியூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவிதாசண்முகசுந்தரம் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News