தங்கப்பதக்கம் வென்ற பள்ளி மாணவருக்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு

தங்கப்பதக்கம் வென்ற பள்ளி மாணவருக்கு பாராட்டு

Update: 2024-06-20 05:13 GMT

பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

தென்காசிமாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார் என்பவரது மகன் ஆதி மகேந்திரன், தடகள போட்டியில் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த ஜூன் 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப்போட்டியில் கலந்து கொண்டார். அதில், 3000 மீட்டருக்கான ஓட்டப்பந்தயப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற பதக்கத்துடன் சொந்த ஊர் திரும்பிய அவருக்கு, அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News