முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது

சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடை பெற்ற நூல் வெளியிட்டு விழாவை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-15 05:24 GMT
. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற உள்ள இடையிலாடும் ஊஞ்சல் எனும் புத்தக வெளியிட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இது சம்மந்தமாக கடந்த 8ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளரும் கவிஞருமான திலகபாமாவிற்கு முகநூலில் பதிவிட்டு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில் சில மணி நேரத்திலேயே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளருமான கவின்மலர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநில பொருளாளரும் கவிஞருமான திலகபாமா ஆகியோரை  சாதி வெளியர்கள் போல சித்தரித்து முகநூலில் பதிவிட்டார். அதற்கு தமிழ்நாடு முற்போக்கு எடுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளர் தமிழ்செல்வனும் சரியான பதிவு தான் என்ற முறையில் பதிவிட்டிருந்தார். இதனை கண்டித்து சாத்தூர் பழைய பேருந்து நிலையம் பின்பு உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடை பெற்ற நூல் வெளியிட்டு விழாவை கண்டித்து மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையிலும், 50க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை சாத்தூர் நகரகாவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Tags:    

Similar News