சூறாவளி காற்றுடன் மழை மரக்கிளை முறிந்து விழுந்தது

கெங்கவல்லியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் சாலையோரம் இருந்த மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதித்தது.

Update: 2024-06-09 14:24 GMT

கெங்கவல்லியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் சாலையோரம் இருந்த மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதித்தது.


கெங்கவல்லி:தம்மம்பட்டியில், சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் சாலையோர மரத்தின் கிளை முறிந்து விழுந்தது.கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி, உடை யார்பாளையம், நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி பகுதியில் நேற்று மாலை, 5:00 மணியளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில், உடையார்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளை முறிந்து, சாலையில் விழுந்தது. இதனால், அவ்வழிப் பாதையில் சிறிது நேரம் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதி மக்கள், மரக்கிளையை அகற்றிய பின், வாகன ஓட்டிகள் சென்றனர்.
Tags:    

Similar News