ரயிலில் பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து படுகாயம்!

திருப்பத்தூர் அடுத்த வடுக்கன் குட்டை பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

Update: 2024-06-07 11:32 GMT

திருப்பத்தூர் அடுத்த வடுக்கன் குட்டை பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வடுக்கன் குட்டை பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து படுகாயம் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை! வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்னையில் இருந்து கேரள மாநிலம் பாலக்கடு செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது ரயில் காட்பாடி லத்தேரி ரயில் நிலையங்கள் இடையே வந்து கொண்டிருந்தபோது படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் வடுக்கன் குட்டை பகுதியில் தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே சிறப்பு இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்தவர் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் நாமக்கல் மாவட்டம், அடுத்த செம்பாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் வெங்கடேஸ்வரன் (22) என்பதும், இவர் சென்னையிலிருந்து நாமக்கல் செல்ல எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது ஓடும் ரயிலில் தவறி விழுந்து படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே போலீசார் இது குறித்து வாலிபரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெங்கடேஸ்வரன் என்பவரின் தந்தை வடிவேல் ரயில்வே காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News