தீயில் கருகி பெண் பலி!

சிங்கம்புணரியில் அடுப்பை பற்ற வைக்க முயற்சிக்கும் போது புடவையில் தீ பற்றிய நிலையில், சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2024-07-05 14:37 GMT
திருமயம்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கூத்தாடியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி கார்த்திகா (30). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இருவரும் திருமயம் அருகே பில்லமங்கலம் ராமு கார்டன் என்ற வீட்டில் தங்கி வேலைபார்த்தனர். இந்நிலையில் கடந்த சில மாதமாக தனியாக வசித்து வந்த கார்த்திகா சம்பவத்தன்று விறகு அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. அலறல் சத்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் வந்து கார்த்திகாவை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து திரும யம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News