பந்தநல்லூர் அருகே தேநீர் கடையில் திருட்டு

பந்தநல்லூர் அருகே வெள்ளூர் டீ கடையில் கேஸ் சிலிண்டர் பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-06-26 01:41 GMT

பந்தநல்லூர் அருகே தேநீர் கடையில் திருட்டு

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது வெள்ளூர். இங்கு டீ கடை நடத்தி வருபவர் துரைச்சாமி மகன் சண்முகம் (60) . சம்பவ நாளன்று கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். திரும்ப வந்து பார்த்த போது கடை பூட்டு உடைக்கப்பட்டு 2 கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்டியில் வைத்திருந்த 12 ஆயிரம் ரூபாய் திருடு போனது. இதுபற்றி பந்தநல்லூர் போலீஸில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News