வீட்டுக்குள் நுழைந்து லேப்டாப் டிவி திருடியவர் கைது

மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியில் பூட்டியிருந்த தனலட்சுமி என்பவரது வீட்டில் புகுந்து லேப்டாப் டிவிக்களை திருடிச்சென்றபோது கையும் களவுமாகப் பிடிபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-06 16:54 GMT

கோப்பு படம்

மயிலாடுதுறை கூறைநாடு பகுதி புனுகீஸ்வரர் தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ராமகிருஷ்ணன் (47). அதே பகுதியில் உள்ள தனலட்சுமி என்பவரது வீட்டை இவர் பாதுகாத்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று காலை நேரத்தில் தனலட்சுமி வீட்டிலிருந்து லேப்டாப் மற்றும் டிவிகை தூக்கிக் கொண்டு செல்லும் நபரைக் கண்ட ராமகிருஷ்ணன் ஓடிச் சென்று வளைத்துப் பிடித்தார்.

அக்கம் பக்கத்தில் இருதவர்களும் உதவிசெய்தனர், பிடிபட்ட நபர் மயிலாடுதுறை கூறைநாடு கிருஷ்ணமூர்த்தி மகன் சுரேஷ்(46) என்பவர் என தெரியவந்தது, உடனடியாக மயிலாடுதுறை காவல்நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு போலீசாரிடம் சுரேஷை ஒப்படைத்தனர்.  போலீசார் வழக்குப் பதிவுசெய்து காவலில் அடைத்தனர்.

Tags:    

Similar News