காளி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே கிராம சபை கூட்டத்தை 100நாள் பணியாளர்களை வைத்து நடத்தியதால் கோபப்பட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-11-01 12:02 GMT

கிராமசபை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காளி ஊராட்சியில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, பெரும்பாலான பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை,   பொதுமக்கள், கூட்டத்திற்கு யாரும் வராததால், ஊராட்சி நிர்வாகத்தினர் 100 நாள் பணிக்கு சென்ற பெண்களை அழைத்து கூட்டத்தில் பங்கேற்க செய்தனர் .   12.30 மணிக்கு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது. தங்களுக்கு, கிராம சபை கூட்டம் நடப்பதே தெரியாது என்றும் , ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் தொடங்கியதை கொண்டாடுவதாக கூறி தங்களை அழைத்து வந்துள்ளார்கள் என குற்றம் சாட்டினர். பின்னர் தாமதமாக தொடங்கப்பட்ட கூட்டத்தில்  தட்டிக் கேட்ட இளைஞர்களால் பத்து நிமிடத்திலேயே முடிக்கப்பட்டது.
Tags:    

Similar News