துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்றக்கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக மற்றும் மத்திய அரசை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அடிமுகவினர் பங்கேற்பு

Update: 2024-02-24 18:43 GMT

திருச்சி, துவாக்குடி வட்டச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் இரண்டாவது சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தஞ்சை சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடிக்கு மிக அருகாமையில் இரண்டாவது சுங்கச்சாவடி உள்ளதால் அதை அகற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தலைமை வகித்து மாவட்டச் செயலாளர் ப.குமார் பேசியபோது, மத்திய, மாநில அரசுகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை என்பதை அதிமுக செயல்படுத்தி வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிமுறையின்படி 60 கி.மீ தொலைவுக்கு பின்னரே மற்றொரு சுங்கச்சாவடி அமைக்க வேண்டும். ஆனால், விதுமுறைக்குப் புறம்பாக, 2 கி.மீ., இடைவெளியிலேயே அடுத்த சுங்கச்சாவடி துவாக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இது மக்களிடம் கூடுதல் வரி வசூலிக்கும் திட்டமாகும். ஒரேயொரு டோல்பிளாசா தான் இங்கே இயங்க வேண்டும். எனவே புதிதாக அமைக்கப்பட்டதை அகற்ற வேண்டும். மத்திய மாநிலஅரசுகள் இணைந்துதான் இத்திட்டத்தை நிறைவேற்றுகின்றன. திமுக அரசை மாற்றக்கூடிய மாற்று அரசாக அதிமுக அமையும். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். வாக்களித்து வெற்றியடையச் செய்த மக்கள்மீது அக்கறையிருந்தால் இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பேசினார். அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் பேசியபோது, “ தமிழகத்தில் இப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தினாலும் அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி வருவார்.

திருச்சி தொகுதி எம்பியைக் கண்டா வரச் சொல்லுங்க என்பது போல உள்ளது அவர் நிலை. 60 கி.மீ., தூரத்தில் தான் அடுத்த சுங்கச்சாவடி அமைக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியதற்கு எதிராக துவாக்குடி பகுதியில் 2 ஆவது சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது. அதை உடனே அகற்ற வேண்டும். தாலிக்கு தங்கம், மினி கிளினிக், மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட அதிமுக அரசின் மக்கள் நலன் திட்டங்களை திமுக பறித்து வருகிறது” என்றார்.

Tags:    

Similar News