சிவகாசியில் திருக்கல்யாண விழா

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஸ்ரீவிஸ்வநாதர் கோவிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-27 12:35 GMT
சிவகாசியில் திருக்கல்யாண விழாவில் குவிந்த பக்தர்கள்...

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்து சமய அறநிலயத்துறைக்கு சொந்தமான, ஸ்ரீவிஸ்வநாதர் - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் எழுந்தருளியுள்ள சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி, நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கும் - ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகள் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.தொடர்ந்து ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சுவாமிகள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள்,நிகழ்ச்சி உபயதாரர்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News