கஞ்சா விற்பனை : 2 பேர் கைது!

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1.500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-06-02 04:40 GMT

அழகுமுத்து, பத்திரகாளிமுத்து

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் மேற்பார்வையில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ராமலட்சுமி தலைமையில் சார்பு ஆய்வாளர் ஞானராஜன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புதுக்கோட்டை சிறுபாடு ஜங்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

Advertisement

அதில், அவர்கள் புதுக்கோட்டை பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர்களான ராமர் மகன் அழகுமுத்து (22) மற்றும் கருப்பசாமி மகன் பத்திரகாளிமுத்து (28) என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News