வால்காட்டுப்புதூரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது.

வால்காட்டுப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-01-08 11:42 GMT

காவல் நிலையம் 

 கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வால்காட்டுப்புதூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தங்கசாமிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜனவரி 6ஆம் தேதி மதியம் 12 மணியளவில் வால்காட்டுப்புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டு இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, கரூர் டி. செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், அமிர்தராஜ் மற்றும் கரூர் வடக்கு லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து,

அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 250தையும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News