ராதாபுரத்தில் அனுமதியின்றி மணல் கடத்தியவர் கைது !
ராதாபுரத்தில் அனுமதியின்றி மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
Update: 2024-07-03 04:44 GMT
கைது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் நேற்று (ஜூலை 2) வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அமரவிலையை சேர்ந்த சாஜன் (45) என்பவர் ஓட்டி வந்த டாரஸ் லாரியில் அனுமதியின்றி எம்சாண்ட் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் ராதாபுரம் போலீசார் சாஜனை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.