வலங்கைமான் : அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றிய நபர் கைது
Update: 2023-12-06 04:25 GMT
பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோவிந்தகுடி -பாபநாசம் சாலையில் முறையான அரசு அனுமதி இன்றி டிராக்டர் மூலமாக மணல் ஏற்றிய கோவிந்த குடி, மெயின்ரோட்டை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் விநாயகமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.