வால்ராசாபாளையம் நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா

வால்ராசாபாளையம் நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா

Update: 2024-02-09 14:44 GMT

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு வட்டாரக்கல்வி அலுவலர் லா.பிரபுக்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வட்டாரக்கல்வி அலுவலர் வ.அருள், பள்ளி மேலாண்மைக்குழுவைச் சார்ந்த வா.செ.கந்தசாமி, வி.சி.முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் ஆசிரியரியை கா.லட்சுமி வரவேற்புரை ஆற்றினார். தலைமையாசிரியர் செ.தங்கவேல் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் து.விஜய் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.திருச்செங்கோடு மகாதேவ வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் டி.எம்.சிவசிதம்பரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பள்ளியில் கடந்த ஆண்டில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், நூறு சதவீத வருகை, சாரண இயக்கத்தில் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான முகாம்களில் பங்குபெற்ற சாரண மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி விழாப் பேருரையாற்றினார்.

நாமக்கல் மாவட்ட போட்டோ மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தலைவர் சு.சதீஸ்குமார், பல்லக்காபாளையம் எஸ்.ஆர்.கே மெட்ரிக் பள்ளியின் முதல்வர் எம்.கண்னன் ஆகியோர் சிறப்புரையாற்றி விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ரேணுகா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை ச.விமலா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் சி.கவிதா, சு.பிரபு, பொ.நித்யா, சா.கீதா, சிற்றரசு, நிவேதா மற்றும் பள்ளியின் சாரண இயக்க மாணவர்கள் ஆகியோர் அடங்கிய குழு சிறப்பாகச் செய்திருந்தனா்.

Tags:    

Similar News