ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருடிய பெண் கைது!

அரக்கோணத்தில் ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருடிய பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-23 05:20 GMT

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் 

அரக்கோணம் ஜோதி நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி புவனேஸ்வரி, சென்னையில் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை தம்பதியர் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மகளும், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிரதீப்பின் மாமியாரும் வீட்டில் மதியம் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து பிரதீப் அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் மங்கம்மாபேட்டை மேம்பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றி கொண்டிருந்த ஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் ஓச்சேரியை அடுத்த களத்தூர் பகுதியை சேர்ந்த இந்துமதி (31) என்பதும் பிரதீப் வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News