மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் பலி

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-10 07:03 GMT
கடையநல்லூரில் மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் பலி

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா். திரிகூடபுரம் பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்த முருகையா மகன் விவேகானந்தன் என்ற செல்வம் (38). இவா் மின்வாரிய ஊழியா்களுக்கு உதவியாளராக தற்காலிகமாக பணி செய்து வந்தாா்.

இவா் கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள மின்கம்பத்தில் பழுது நீக்குவதற்காக ஏறியபோது, தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி உள்ளாா்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த விவேகானந்தனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

Similar News