கராத்தே போட்டியில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

ஸ்ரீபெரும்புதுாரில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

Update: 2023-11-01 08:54 GMT

கராத்தே போட்டி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஹயக்ரீவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு கராத்தே டு அசோசியேஷன் சார்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் முதலாம் ஆண்டு கராத்தே போட்டி நேற்று முன்தினம் நடந்தன. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கட்டா மற்றும் குமுத்தே ஆகிய இரு பிரிவில் நடந்த போட்டியில் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். கட்டா மற்றும் குமுத்தே பிரிவில், ஸ்ரீபெரும்புதுார் ஹயக்ரீவர் பள்ளி மாணவர் அருண்குமார் தங்கப்பதக்கம் வென்றார். இதே பள்ளியைச் சேர்ந்த முகிலன், கட்டா பிரிவில் வெள்ளியும், குமுத்தே பிரிவில் வெண்கலமும் வென்றார். 'குமுத்தே' பிரிவில், ஸ்ரீபெரும்புதுார் விவேகானந்தா பள்ளி மாணவர் ஹரிபிரசாந்த் வெள்ளி வென்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News